• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக ஆட்சியின் கீழ் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் என நம்பிக்கையோடு உள்ளோம் – தொழில்முனைவோர்கள் நம்பிக்கை

May 7, 2021 தண்டோரா குழு

திமுக ஆட்சியின் கீழ் தொழில் நிறுவனங்கள் மீண்டு எழும் என நம்பிக்கையோடு உள்ளோம்
என தொழில்முனைவோர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாக்ட் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பொறுப்பு எற்க இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையிலான அரசு கொரோனாவில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுக்கும். குறு சிறு தொழில் முனைவோர்களை பாதுகாப்பதுடன் தொழில் சார்ந்து, வியாபாரம் சார்ந்து தொழில் செய்பவர்கள் வருவாய் இழப்பை சரி கட்டவும், அதற்கான நடவடிக்கை தங்கள் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கின்றோம்.

குறிப்பாக மத்திய அரசிடம் நீங்கள் வாதாடி தொழில்துறை சார்ந்த கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ரத்து செய்ய செய்வதோடு, ஜப்தி நடவடிக்கைகள் எடுப்பதை தடுத்து நிறுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் வங்கி கடன்களை தொழில்முனைவோர்கள் திருப்பி செலுத்தவும் அதுபோல வீட்டுக் கடன் டூவீலர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்துவதற்கு ஒரு ஆண்டு காலம் வரை காலஅவகாசம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் விழுந்துகிடக்கும் தனிநபர் வருமானம் இழந்திருக்கும் இந்த தருவாயில் நீங்கள் இது போன்ற நடவடிக்கைகள் மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்றுத்தர வேண்டும். உங்களது ஆட்சியின் கீழ் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நாங்கள் மீண்டு எழுவோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க