• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைகழக ஊழியர்களுக்கு மூலிகை முக கவசங்கள் வழங்கல்

May 7, 2021 தண்டோரா குழு

கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக பாரதியார் பல்கலைகழக ஊழியர்களுக்கு மூலிகை முக கவசங்கள் மற்றும் ஆர்சாணிக் ஆல்பம் மாத்திரைகளை துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் வழங்கினார்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழக நாட்டுநல பணி திட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு கருதி பல்கலைகழக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு முக கவசங்கள், மற்றும் ஆர்சாணிக் ஆல்பம் மாத்திரைகளை துணை வேந்தர் டாக்டர் காளிராஜ் வழங்கினார்.

பல்கலைகழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அண்ணாதுரை ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் பல்கலைக்கழக பதிவாளர் முருகன்,ஆட்சிகுழு உறுப்பினர் ரூபா குணசீலன்மற்றும் பேராசிரியர்கள் மணிமேகலன், வசந்த், சுரேஷ்பாபு, முருகவேல்,சுரேஷ்குமார்,சிங்கார வேல்,பாலசந்தர்,அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க