அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு திமுகவில் இணைந்தார்.
கோவை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக
இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது கழகம் எந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அது அம்மா அவர்களின் மறைவிற்கு பின்னர் திசை மாறி மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.
மேலும், இளைஞர்களுக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை மக்கள் பணியாற்றுவதற்கும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகும் இவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. ஆகவே எனக்கு வழங்கிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.
23 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நல்வழிகாட்டியதை கொண்டாடி மகிழ்ந்த ஆலமரம் ஸ்டார்ட் அப் இன்குபேட்டர்
கோவை ஆனமலைஸ் டொயோட்டோவில் வாடிக்கையாளர்களுக்கு அர்பன் குரூஸர் ஹைரைடர் விழிப்புணர்வு அமர்வு
கோவை புரோசோன் மாலில் கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்த லைகா கோவை கிங்ஸ் அணியினர்
ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது
1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை -நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு
கிரசர், குவாரிகள் சங்கத்தின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு