• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு – கருப்பு சட்டை அணிந்து நடைபயிற்சி மேற்கொண்ட சமூக ஆர்வலர்கள்

April 21, 2021 தண்டோரா குழு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து சமூக ஆர்வலர்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

கோவையில் பல கோடி செலவில் சுமார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் மூலம் குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு குளக்கரைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்காக்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் உள்ள முக்கிய இடங்களான ஆர்.எஸ் புரம்,ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் காண்பதற்கு அழகாக இருந்தாலும் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் அமைந்து வருகிறது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுமார் 3 கிலோமீட்டருக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக அந்த பகுதியில் இருந்த சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் கருப்புச்சட்டை அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி கொண்டனர்.இவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் மகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் இந்த நடைப் பயிற்சியில் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் என்ற பெயரில் இயற்கையை அளித்து வருவதாகவும் இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகவும் பறவைகளின் இருப்பிடங்கள் அளிக்கப்படுவதாவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க