• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது – சத்யபிரதா சாகு

April 19, 2021 தண்டோரா குழு

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மே 2 காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்கு முதலில் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு தொடர்ந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாகப் பத்திரமாக காவல்துறை பாதுகாப்புடன் இருக்கிறது,அதில் எந்த தவறும் இதுவரை இல்லை அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வாக்குபதிவு இயந்திரம் என்பது கால்குலேட்டர் போன்றது அதில் முறைகேடு செய்ய முடியாது என்றார்.

மேலும் படிக்க