• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் விவேக் மரணம் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி

April 17, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் பராமரிப்பு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும், நடிகர் விவேக் மரணம் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தமிழக கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வசம் ஒப்படைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதனடிப்படையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர்கள் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அரசு போதுமான அளவில் கோயில்களை சரியாக பராமரிப்பதில்லை பெரிய கோவில்களில் வரும் வருமானத்தைக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த கோவில்களில் வருமானத்தைக் கொண்டு சிறிய கோயில்களை பாதுகாத்திட வேண்டும்,அவ்வாறு அரசு செய்ய மறுத்து வருகிறது.அதே போல் கோவில்களின் நில அபகரிப்பு அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும்,தமிழகத்தில் தான் அதிகம் சிலை திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது எனவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக அரசு வெள்ளை அரிக்கையை வெளியிட வேண்டும் இல்லை என்றால் நீதி மன்றத்தை நாடுவேன் என தெரிவித்தார்.

மேலும் நடிகர் விவேக் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர் தடுப்பூசி காரணமாக தான் உயிரிழந்தாரா என மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க