• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவு !

April 15, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டை விட மிக மோசமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத்தாண்டி, கைமீறி விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கோவை மாவட்டத்திலும் வேகமாக பரவி வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனை,இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மயமான கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் படுக்கை வசதிகள் மாவட்ட நிர்வாகம் அதிகமாக ஏற்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இது போதாது பட்சத்தில் கோவையில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டு பெட்டிகளாக மாற்றக்கூடிய ஏற்பாடு விரைவில் நடக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்,பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்க்கவும், 2 மீட்டர் இடைவெளி அவசியம் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.இவைகளை கடைப்பிடிக்க தவிர்த்தவர்களுக்கு 200 மற்றும் 500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.தற்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தொடர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வந்துள்ளது.

மேலும் படிக்க