• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது

April 15, 2021 தண்டோரா குழு

ரயில்நிலையம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை நகரில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.இந்நிலையில் நேற்று இரவும் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக உக்கடம்,ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர்,ராமநாதபுரம்,பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

குறிப்பாக ரயில் நிலையம் அருகே உள்ள பாலத்தில் கீழ் பகுதியிலும், மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி பள்ளி அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.இதே போல உக்கடம் புற வழிச்சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள், தேங்கிய தண்ணீரில் வாகனங்களை உருட்டி செல்லும் நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியாக இன்னும் சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், கடும் வெயிலால் தவித்த கோவை மக்கள் குளிர்ச்சியான சூழல் திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க