• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரத்தினம் கல்லூரியின் வணிகவியல் துறை , வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

April 14, 2021 தண்டோரா குழு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக வரும் 2021 கல்வியாண்டில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் (CA, BPS, B&I, A &F, CS, IT, IB and PA) வணிகவியல் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், குறும் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் உதவியாக அமையும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் வென்ஸ்டர் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் அமைப்பின் நிர்வாகப் பங்குதாரர் மனோஜ் , கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.முரளிதரன் ,கல்லூரியின் முதன்மை நிர்வாக அலுவலர் முனைவர் ஆர்.மாணிக்கம், வணிகவியல் துறைப் புலமுதன்மையர் முனைவர் T.M.ஹேமலதா, வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் V.T. தனராஜ் மற்றும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் U.பொன்மணி மற்றும் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன், வணிகவியல் துறை சார்ந்த பன்முக நோக்கிலானஆய்வுகள், குறும் திட்ட ஆய்வுகள், மாணவர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையிலான ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெரும் உதவியாக அமையும்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மாணவர்களுக்கு அறிமுகம் செய்த நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதன் மூலம்பயன்பெற இருக்கின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் படிக்க