• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகரில் மாஸ்க் அணியாத 266 நபர்களுக்கு அபராதம் விதிப்பு ரூ.53 ஆயிரம் வசூல்

April 12, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் மாஸ்க் அணியாத மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு ஒரே நாளில் ரூ.53 ஆயிரத்து 200 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பொது இடங்கள், பேருந்துகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், ஷாப்பிங் மால் ஆகியவற்றில் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத நபர்கள், நிறுவனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாஸ்க் அணியாத 266 பேருக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.53,200 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ.27,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், கடைகளில் கொரோனா விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க