• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது

November 23, 2016 தண்டோரா குழு

2018-ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் தொடங்கப்படும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் அளிக்க ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாத்து வருகிறது. இதனால், கறுப்புப் பணம் பதுக்குவோரின் விவரங்களைத் தருமாறு இந்தியா பலமுறை கேட்டும் பெற முடியவில்லை.

மத்திய அரசின் முயற்சியால் சுவிட்சர்லாந்து இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவிடம் தர தற்போது ஒப்புக்கொண்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவில், தங்கள் நாட்டில் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை இந்தியாவுடன் பரிமாறிக்கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி இருநாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பிறநாட்டினரின் வங்கிக் கணக்கு விவரங்களை 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து திரட்டும்.

அதன்படி 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சுவிட்சர்லாந்து தன்னிடம் உள்ள இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு அளிக்கும். இதே போல இந்தியாவும் தன்னிடம் உள்ள ஸ்விஸ் நாட்டவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அந்நாட்டிடம் அளிக்கும் என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க