• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

களத்தில் இறங்கிய மாநகராட்சி கமிஷனர் ;தனியார் பேக்கரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையம் சாலை பூமார்க்கெட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் பூமார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் 12 நபர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டதால் ரூ.5400 அபராதமும், மற்றொரு கடைக்கு ரூ.5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜ், மண்டல உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க