• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனையில் 4500 டோஸ் தடுப்பூசி இருப்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் காலையிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்தது. அதன்பின்னர் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே போதிய ஆர்வம் இல்லாமல் இருந்தது. தற்போது நாள்தோறும் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 4,500 டோஸ் தடுப்பூசிகளும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2,370 தடுப்பூசிகளும் இதுதவிர மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் படிக்க