• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

April 8, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ்,கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையானது, நேற்று ஒரே நாளில் மீண்டும் 4 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும்,அதனை கட்டுப்படுத்தவும் வரும் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

அதன்படி,

*10.04.2021முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை

*வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஈ.பாஸ் கட்டாயம்

*வணிக வளாகங்கள், உணவகங்கள் , டீக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். இரவு 11 மணி வரை மட்டுமே அனுமதி

*திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி,
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை இல்லை.

*சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை கடைகளுக்கு தடை

*நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டுமே அனுமதி

*மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

*டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேரும் மட்டுமே பயணிக்க அனுமதி

*பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.*

*திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி

*ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.

*ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் – தமிழக அரசு.

மேலும் படிக்க