• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்துள்ளது – கமல் பேட்டி

April 4, 2021 தண்டோரா குழு

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்துள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தான் சம்பாதித்த பணத்தை தான் தேர்தலில் செலவு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார். செலவு கணக்குகளை நேர்மையாக காட்டியுள்ளதாகவும், அதற்காக அதிகாரிகளே பாராட்டியதாகவும் அவர் கூறினார். அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்தன எனவும், எல்லாவற்றிக்கும் தயாராக தான் வந்துள்ளேன் எனவும் கூறிய அவர், எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என முடிவு எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர், புதிய படங்களிலும் நடிப்பேன் எனவும், கூடுதலாக சம்பளம் வாங்கி மீண்டும் மக்களுக்கு செலவு செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார். அரசியலுக்கு இடைஞ்சல் எற்பட்டால் சினிமாவில் நடிப்பது நிறுத்தப்படும் எனவும், எனது அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். தனது முகவரி விரைவில் கோவைக்கு மாறும் எனவும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் சொல்வது போல, தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க