• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்காததே இப்பிரச்சனைக்கு காரணம் – வானதி சீனிவாசன் விளக்கம்

April 2, 2021 தண்டோரா குழு

கோவையில் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

உத்தரபிரதேச முதலமைச்சர் கோவை வருகையின் போது நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காதது பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிவித்த வானதி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு சதவீதம் கூட பாஜக வஞ்சகம் செய்யவில்லை என்றார்.சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது எனவும் எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரான கட்சியல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சக்திகளை ஒதுக்க வேண்டும் எனவும் கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் அருண் ஜேட்லி குறித்து பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாஜக குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது எனவும் விமர்சித்த வானதி, வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை திமுக செய்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க