• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – நாகர்கோவில் ரயில் மதுரை – நாகர்கோவில் இடையை 13 ஆம் தேதி வரை ரத்து

April 1, 2021 தண்டோரா குழு

கோவை – நாகர்கோவில் ரயில், மதுரை – நாகர்கோவில் இடையே வரும் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மதுரை அருகே திருமங்கலம்,துலுக்கப்பட்டி இடையே ரயில்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,கோவை – நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே கடந்த மார்ச் 21ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மதுரை – நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில்,பராமரிப்பு பணிகள் முடிவடையாததால்,கோவை – நாகர்கோயில் அதிவிரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயில் வரும் 13 ஆம் தேதி வரை நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், 13 ஆம் தேதி வரை கோவை – நாகர்கோவில் ரயில், கோவை – மதுரை இடையே மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – கோவை ரயில், மதுரை – கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க