• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – நாகர்கோவில் ரயில் மதுரை – நாகர்கோவில் இடையை 13 ஆம் தேதி வரை ரத்து

April 1, 2021 தண்டோரா குழு

கோவை – நாகர்கோவில் ரயில், மதுரை – நாகர்கோவில் இடையே வரும் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மதுரை அருகே திருமங்கலம்,துலுக்கப்பட்டி இடையே ரயில்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,கோவை – நாகர்கோவில் மார்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஏற்கனவே கடந்த மார்ச் 21ம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மதுரை – நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில்,பராமரிப்பு பணிகள் முடிவடையாததால்,கோவை – நாகர்கோயில் அதிவிரைவு ரயில் மற்றும் நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயில் வரும் 13 ஆம் தேதி வரை நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதனால், 13 ஆம் தேதி வரை கோவை – நாகர்கோவில் ரயில், கோவை – மதுரை இடையே மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில் – கோவை ரயில், மதுரை – கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க