• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதி ஸ்ரீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார்

March 31, 2021 தண்டோரா குழு

பாஜகவினர் பேரணியில் கல் வீசி இஸ்லாமியர்கள் கடைகளை தாக்கியதை கண்டித்து வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னதாக புலியகுளத்தில் இருந்து பாஜக வினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக தேர்நிலைக்கு திடலுக்கு வந்தனர்.அப்போது பெரிய கடை வீதி சிக்னல் அருகே வரும் போது பாஜகவினர் முஸ்லிம் இளைஞர்களை பார்த்து கோசம் எழுப்பியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் கோசம் எழுப்பியதால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தள்ளு முள்ளு ஏற்பட்டு பாஜகவினர் இஸ்லாமியர்கள் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய பாஜகவினர் மற்றும் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜனிடம் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க