• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல ஐஜி, கோவை மாவட்ட எஸ்.பி. மாற்றம் – தேர்தல் ஆணையம் அதிரடி !

March 31, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதிரடியாக ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது.

இந்நிலையில்,மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தினகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜியாக அமல்ராஜ், கோவை எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மண்டல ஐ.ஜி.யாக தீபக் எம்.தமூர், திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க