• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு – பிரகாஷ்காரத் குற்றச்சாட்டு

March 30, 2021 தண்டோரா குழு

எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை கணபதி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர்,

எடப்பாடி பழனிசாமி அரசு அடிமை அரசு என குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவின் கட்டளைகளுக்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது எனவும், அடிமை அரசிடம் இருந்து மீட்க தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார். தமிழக விவசாயிகள் நலனை பாதிக்கும் வேளாண் திருத்த சட்டங்களுக்கு அதிமுக எம்.பி.க்கள் ஆதரவளித்தனர் எனவும், பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக அதிமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் மதத்தின் பெயரால் மக்களை பிரித்துள்ளனர் எனவும், ஆர்.எஸ்.எஸ் சித்தாங்களை பாஸி தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கிறது எனவும் கூறிய அவர், அதிமுகவிற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு அளிக்கும் வாக்குகளாகும் எனத் தெரிவித்தார்.

மக்கள் விரோத மோடி, எடப்பாடி அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், பாஜகவிற்கு வால் பிடிக்கும் அதிமுக அண்ணா, திராவிடம் ஆகிய பெயர்களை கைவிட வேண்டும் எனவும் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

மேலும் படிக்க