March 29, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.அதன்படி நேற்று பீளமேடு, ஆவாரம்பாளையம், ஜெகநாதன் காலனி, ஆர்கே மில் காலனி, வார்டு எண் 65, கருணாநிதி நகர், உடையாம்பாளையம் மெயின் ரோடு, மீனா எஸ்டேட், கண்ணபிரான் மில் ரோடு, நவீன் நகர், கிருஷ்ணா காலனி, ராஜீவ் காந்தி நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
இப்பகுதியில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது இங்கு உள்ள தொழிற்சாலைகள் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இந்த பகுதி முழுவதும் சாலை வசதி,குடிநீர் வசதி,பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் மக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் ஆகவே இத்தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு அளியுங்கள்,
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மகேந்திரன் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் தொண்டர்கள் வீதி வீதியாக சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.