• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உடன் கூட்டு சேர்ந்து நியோவின் புதிய நியோ எக்ஸ் அறிமுகம்!

March 25, 2021 தண்டோரா குழு

நியோ, இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் ஃபிண்டெக் வங்கியான இது, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் விசாவுடன் இணைந்து மில்லினியல்களுக்கான அதிநவீன மொபைல் வங்கி தீர்வினை தரும் வகையில் புதிதாக நியோ எக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 2021-ஆம் ஆண்டில் 2மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த புதிய துவக்கத்திற்கு முன்னதாக, தேசிய அளவிலான மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள 8000 மில்லினிய மக்களிடம் வங்கித் தேவைகளைப் புரிந்துகொள்ள கோவிட் 19 தொற்று பரவலுக்கு முன்பாக விரிவான ஆய்வுடன் கூடிய சர்வே ஒன்றினை மேற்கொண்டது. இந்தியாவின் இளம் தலைமுறையினர்களில் 70% வாடிக்கையாளர்கள் ஆதரவுடன் கூடிய டிஜிட்டல் வங்கிகளை விரும்புவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

55 சதத்தினர் ரிவார்ட்ஸ் மற்றும் சலுகைகளுக்காக வங்கிகளை மாற்றுவோம் என்றும், 45 சதத்தினர் சிறந்த வட்டி விகிதங்களுக்காக வங்கிகளை மாற்றுவதாகவும் கூறினர். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 0 சதம் கமிஷன், வங்கி கணக்கு பராமரிப்புக்கு 0 சதம் கட்டணம் மற்றும் கணக்கில் இருப்புவைக்கப்படும் தொகைக்கு 7 சதம் வட்டி உள்ளிட்ட தொழில்முறை சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது குறித்து நியோ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் பாக்ரி கூறுகையில்,

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேங்கிங் ஃபிண்டெக் நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் அனுபவத்தை எளிதாக்குவதையும் மேம்படுத்துவதையும் முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் நியோ எக்ஸ் அறிமுகமானது வங்கியின் டிஜிட்டல் மாற்றத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்று. ஈக்விடாஸ் எஸ்.எஃப்.பியுடனான பாட்னர்ஷிப்புடன் மிகவும் சிறப்பு மிக்க உற்பத்தியைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நியோ எக்ஸ் மூலம் சிறந்த சேமிப்புக் கணக்கை, சிறந்த-இன்-கிளாஸ் முதலீட்டுக் கணக்கோடு இணைத்து வழங்குவோம், இவை அனைத்தும் நியோவின் வழக்கமான சிந்தனை மற்றும் மகிழ்ச்சியான பயனர் இண்டர்ஃபேஸ_டன் இணைக்கப்பட்டுள்ளன. இது மிக விரைவில் விரும்பப்படும் வங்கி தயாரிப்பாக மாறும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.” என்றார்.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி வைபவ் ஜோஷி கூறுகையில்,

வங்கி துறையில் அடுத்த பெரிய மாற்றம் நியோபாங்கிங். புதிய சிந்தனையை வளர்ச்சியை உருவாக்குவதில் நியோவுடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பயன்பாட்டுத் தேவை உந்துதலால் டிஜிட்டல் வங்கி தயாரிப்புகளை உருவாக்குவதே இன்றைய தேவையாக இருக்கிறது. அதை, எங்கள் நியோபங்க் அண்டு ஃபிண்டெக் திட்டங்களுடன் அதைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கூட்டாளர்களுக்கு உதவும் வகையில் விரிவான எபிஐ பேங்கிங் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நியோ அதன் இலக்கு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தனிப்பயன் வளர்ந்த தீர்வை உருவாக்குகிறது.இந்த திட்டம் பாரம்பரிய வங்கி மனநிலையின் சிந்தனைகளை உடைத்தெறிந்து, உண்மையான திறந்த பேங்கிங் மாதிரியை நிறுவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். என்றார்.

மேலும் படிக்க