• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

24 மணிநேரமும் வார்டில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் தொண்டர்கள் வருவார்கள் -டாக்டர் ஆர் மகேந்திரன்

March 19, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன்இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் இன்று 59 மற்றும் 60வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி ஒண்டிப்புதூர் சுங்கம், மதுர வீரன் கோவில் வீதி,எழில் நகர், மாரியம்மன் கோவில், நஞ்சப்ப செட்டியார் வீதி ஆறுமுக கவுண்டர் வீதி, நேரு நகர் குடியிருப்பு, ஆஞ்சநேயர் காலணி, திருவள்ளுவர் நகர், எஸ்.எம்.எஸ்.லே அவுட், புது செட்டியார் வீதி, எஸ்.ஐ.எச்.எஸ் காலணி ரோடு, ரேணுகா நகர், கணபதி நகர், பழனியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் தன் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

*வேட்பாளரை வீட்டிற்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி;*

பிரச்சாரத்தின் போது மகேந்திரன் மதுரவீரன் கோவில் வீதியில் பள்ளி மாணவி ஒருவர் வந்து எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அவரை தன் அழைத்து சென்று தன் பெற்றோரிடம் டார்ச் லைட் சினத்தித்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது அப்பகுதி மக்கள் யாரும் எங்க தெருவுக்கு வரவில்லை சார் நீங்க தான் வந்துருக்கிறீங்க. கண்டுக்க உங்களுக்கு தான் என்று மகேந்திரனுக்கு நம்பிக்கை அளித்தனர்.

இதையடுத்து, வாக்காளர்கள் மத்தியில் மகேந்திரன் பேசுகையில்,

மாறி மாறி இரண்டு திராவிட கட்சிக்கும் வாக்களித்தீர்கள்.ஆனால் இதுவரை இந்த பகுதியில் என்ற மாற்றமும் நடைபெறவில்லை. காலணிக்குள் கால்வாய் வசதி கூட இன்னும் இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் உங்கள் பகுதிக்கு நிறைய அடிப்படை வசதிகள் செய்து தருவேன்நான் பெற்றி பெற்றால் மாதம் தோறும் ஒவ்வொரு வார்டுக்கும் நிச்சயம் வருவேன்.உங்கள் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்வேன்.கையெழுத்து போட்டுக்கொடுக்க நான் தயார். 24 மணிநேரமும் வார்டில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் தொண்டர்கள் வருவார்கள். சரித்திரத்தில் இப்படி வெற்றி இல்லை என்ற அளவிற்கு எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் டாக்டர் மகேந்திரனுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்து சென்றனர்.

மேலும் படிக்க