• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவோம் -ம.நீ.ம.சிங்காநல்லூர் வேட்பாளர் மகேந்திரன் பிரச்சாரம்

March 18, 2021 தண்டோரா குழு

ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவோம் என கோவை சிங்கநல்லூர் வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் R.மகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்கநல்லூர் 74 மற்றும் 75 வது வார்டு குடியிருப்பு மற்றும் காலனிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர்R.மகேந்திரன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர், டாக்டர் ஆர் மகேந்திரன் தொகுதியில் தனது பிரச்சாரத்தை மார்ச் 16ம் தேதி துவங்கினார்.74-வது வார்டின் சர்ச் சாலை, 80 அடி சாலை, பாரதி நகர், ஒலிம்பஸ் மற்றும் 75-வது வார்டின் முக்கிய பகுதிகளான பூங்கா நகர், வல்லாய் நகர், கிரெசென்ட் பள்ளி, பாத்திமா நகர், சரமேடு பிரதான சாலை, நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் தெரு பகுதிகளில் தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு காலனிகளிலும், குடியிருப்பாளர்கள் நலச் சங்க அலுவலகங்களிலும், ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளிலும் தனது சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு திரட்டினார். இப்பகுதியின் அனைத்து தினசரி கூலி தொழிலாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களையும் சந்தித்து உரையாடினார்.வாக்கு சேகரிப்பின்போது வார்டின் அனைத்து பகுதிகளையும் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட்டினை கொண்டு ஒளிரச்செய்தனர்.

சிங்கநல்லூரில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும், ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்குவதாகவும் உறுதியளித்தார்.சிங்கநல்லூரில் வசிக்கும் பொதுமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்து பின்பும் எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு தங்களை சுலபமாக அணுக முடியும் என்ற வாக்குறுதியையும் டாக்டர்R.மகேந்திரன் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.

மேலும் படிக்க