• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 17, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது.இதில், மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டில் உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அன்றாடம் சுமார் 3 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

உக்கடம் பகுதியில் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் லாரிகள் மூலமாக தினசரி கொட்டப்படுகிறது. இந்த பண்ணையில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

‘‘ உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கழிவு நீர் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா? எனவும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு வழக்கமான ஒன்று தான்,’’ என்றனர்.

மேலும் படிக்க