• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது கோவையில் மாநிலத் தலைவர் முருகன் பேட்டி

March 15, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது கோவையில் மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைந்துள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும். பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தவர். பாஜகவில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு என்பது அவர்களது அரசியல் பின்புலம் மற்றும் அரசியல் சேவை உள்ளிட்டவற்றை கண்டறிந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜகவில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பானவர்கள் கொள்கைக்காக உறுதி கொண்டவர்கள் கட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர் என தெரிவித்தார்.

விரைவில் முக்கிய பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் படிக்க