• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தேர்தல் அறிக்கை வெற்று, பொய்யான அறிக்கை – எஸ்.பி.வேலுமணி

March 13, 2021 தண்டோரா குழு

திமுக தேர்தல் அறிக்கை வெற்று, பொய்யான அறிக்கை என்றும், எடப்பாடி சொல்வதை செய்வார் என்பதால் உண்மையான அறிக்கை என்பது அதிமுக வெளியிடுவது தான் என்றும், ஏற்கனவே, கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர் என அறிக்கை தொடர்பான சிறு குறிப்பை முதல்வர் சொல்லிவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகம் முழுவதும் எடப்பாடி அலை அடிப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, கோவை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.

முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மைல்கள், சுகுனாபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாமிதரிசனம் மேற்கொண்டவர், தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டார். அந்த பகுதி மக்களிடையே, சாதனை விளக்க நோட்டீஸ்களை வினியோகம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க