• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதித்த பெண்களை கவுரவிக்கும் வகையில் கோவை வொண்டர் வுமன் டிரஸ்ட் சார்பாக விருது

March 8, 2021 தண்டோரா குழு

கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை கவுரவிக்கும் வகையில் கோவை வொண்டர் வுமன் டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டி புரோசான் மாலில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் பெண்களை கவுரவிக்கும் வகையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் சிறந்த பெண்மணிகளை தேர்வு செய்து கோவை வொண்டர் வுமன் டிரஸ்ட் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிறந்த மகளிர்க்கு விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் முன்னதாக ,தொழில் முனைவோரான காந்திமதிக்கும்,அம்மா சேவா டிரஸ்ட் நிறுவன தலைவர் சோனாலி பிரதீப்,பெஸ்ட் குழுமங்களின் தலைவர் ஸ்ரீபிரியா கௌரிசங்கர்,முன்னால் துணை மேயர் லீலாவதி உண்ணி, டாக்டர் உவனேஸ்வரி,ஆகிய ஐந்து மகளிர்க்கு கோவை வொண்டர் வுமன் ஐகான் விருது வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்களின் இயக்குனர் நளின் விமல்குமார், பிரபல தொழிலதிபர் ,ஆனந்த் பழனிச்சாமி உட்பட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். விழாவில் தொழில்முனைவோர், சமூக ஆர்வலர், சிறந்த ஆசிரியை, நுண்கலை, விளையாட்டு, புகைப்படக் கலைஞர், , சுகாதாரப் பணியாளர், வேளாண்மை நிபுணர்,சமையல் கலை என பல்வேறு துறைகளில் சாதித்த மகளிர்க்கு விருது வழங்கப்பட்டது.

இதில் சுபத்ரா, லதா வெண்ணிலா, சஹானாஸ் பர்வீன், மோனிஷா ரவி, அனுஷா பவித்ரா, ரம்யா, திருநங்கை செல்வி, அஸ்வத் பெனாசிர், பிரியா சேவியர், சித்தாரா கார்த்திகேயன், ஜெயஸ்ரீ ஜோதீஸ்வரன், மஞ்சுளா, ராதிகா, சாரு ,பானுமதி, சரண்யா சின்னதுரை, பத்மஜா, ஜெயந்தி, இந்திராணி ராதாகிருஷ்ணா, சபீனா,ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரிவிக்கப்பட்டனர். தொடர்ந்து ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அறியப்படும் கமலத்தாள் பாட்டிக்கு ஆயுட்கால சாதனையாளர் விருது வழங்கி கவுரிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க