• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்

March 6, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு போர் பட்டாலியன் பிரிவு சார்பில் நடைபெற்ற என்.சி.சி மாணவியருக்கான ‘பி’ பிரிவு தேர்வில் மாணவிகள் துப்பாக்கி பயிற்சி தேர்வில் ஈடுபட்டனர்.

தேசிய மாணவர் படை மாணவியருக்கான ‘பி’ சான்றிதழ் தேர்வு கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் நீலகிரி ,திருப்பூர் கோவை உள்ளிட்ட 3மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படையில் உள்ள கல்லூரி அளவிலான மாணவர்களுக்கான தேர்வை கமாண்டர் அதிகாரி கர்னல் ஜே பி எஸ் சௌகான் துவக்கி வைத்தார்.

இதில் அணி நடைப்பயிற்சி, தேசிய மாணவர் படை அமைப்பு, வரைபடம் பயிற்சி,தூரங்களை கணக்கிடுதல் ,தரைப்படை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் குறித்த கையாளுதல் மற்றும் தற்காப்பு கலை உள்ளிட்டவைகள் தேர்வு மாணவியருக்கு நடத்தப்பட்டன. மொத்தம்,653 என்.சி.சி., மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்

இதில் இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படை என தனி தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் போது இளம் மாணவியர்கள் துப்பாக்கிகளை கொண்டு கையாளுதல் பயிற்சி பெற்றது பார்வையாளர்களை வியக்க வைத்தது.

இது குறித்து என்.சி. சி அலுவலர் கல்பனா கூறுகையில்,

இந்திய ராணுவத்திற்கும், பெண்கள் வருவது மிகவும் முக்கியம் என்று மேலும் இந்த என்.சி.சி மூலம் தங்களை பாதுகாத்து கொள்வதுடன் இந்திய நாட்டை ,ராணுவத்தினரும், கடற்படையினரையும் காப்பாற்றுவத்தில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க