• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிப்பு

March 1, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரையும், வீட்டையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து திமுகவினர், தேர்தல் அதிகாரியிடத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி ஆனந்தகுமார் காரை பார்வையிட்டார். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க