• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து, ஒப்பாரி வைத்து நூதனமுறையில் போராட்டம்

February 23, 2021 தண்டோரா குழு

2வது நாளாக மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து,ஒப்பாரி வைத்து நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.மேலும், கடந்த 38 ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பிற அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நிலை மோசமாகவுள்ளதாகவும், தங்களுக்கு வழங்க வேண்டிய முறையான கால முறை ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போன்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி கொடையாக குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே போராட்டம் நடத்த அனுமதி மறுகப்பட்டதால், போராட்ட காரர்கள் சாலையில் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க