• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி !

February 21, 2021 தண்டோரா குழு

கோவையில் அதிக அளவில் மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வது பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் என்பது இதில் நிரூபணம் ஆகிறது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கோவையில் ஜல்லிக்கட்டு நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறோம்.தமிழகத்தின் கலாச்சாரம் நமது பழைமையான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும்.கோவையில் நீண்ட காலமாக நடைபெறாத ஜல்லிக்கட்டு 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறதும் கடந்த ஒரு மாதமாக பல்வேறு துறையினர் மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு நன்றி கடந்த 2018 ஆம் ஆண்டு 445 காளைகளும் 323 மாடுபுடி வீரர்கள் கலந்து கொண்டனர், 2019 ஆம் ஆண்டு 746 காளைகள், 599 மாடுபுடி வீரர்கள் மற்றும் கடந்த ஆண்டு ( 2020 ) 940 காளைகள், 745 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஒவ்வொரு வருடமும் சிறந்த காளைகள், மாடுபுடி வீரர்களுக்கு மாருதி கார், ஹீரோ பைக், எஸ் எல் சூப்பர் போன்ற பரிசுகளும் வழங்கப்படுகிறது, மேலும் தங்க நாணயம், பீரோ சேர் சைக்கிள் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் இந்த ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000திறக்கும் மேற்பட்ட காளைகள், 900திர்க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவு , குடிநீர், கழிப்பறை என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கால்நடை சார்பில் 18 மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாக்னம் மற்றும் பொது சுகாதார துறை சார்பில் 12 மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாடுகள் காத்திருப்பு பகுதியும், வாடிவாசல் வரை மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. அதே போல் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது. சிறப்பு வாய்ந்த விழா நடத்த அனுமதி கொடுத்து உத்தரவு இட்ட முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி.

கோவை அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து அதிக மாடுகள் கலந்து கொள்வது ஆரோக்கியமாக உள்ளது,பொதுவாக மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தான் ஜல்லிக்கட்டு பிரபலம், கோவையில் ஆரம்பித்து நம் மக்கள் நாட்டு மாடு வளர்கிறார்கள் அதனால் இந்த வாய்ப்பு உள்ளது வருங்காலத்தில் இன்னமும் இது அதிகமாக இருக்கும் இது ஆரோக்கியமான விசயம், பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் என்பது இதில் நிரூபணம் ஆகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க