• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் – அமைச்சர் எஸ்.பி வேலுமணி !

February 21, 2021 தண்டோரா குழு

கோவையில் அதிக அளவில் மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வது பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் என்பது இதில் நிரூபணம் ஆகிறது என அமைச்சர் எஸ்பி.வேலுமணி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

கோவையில் ஜல்லிக்கட்டு நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறோம்.தமிழகத்தின் கலாச்சாரம் நமது பழைமையான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும்.கோவையில் நீண்ட காலமாக நடைபெறாத ஜல்லிக்கட்டு 2018 முதல் நடத்தப்பட்டு வருகிறதும் கடந்த ஒரு மாதமாக பல்வேறு துறையினர் மற்றும் ஜல்லிக்கட்டு குழுவினர் வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு நன்றி கடந்த 2018 ஆம் ஆண்டு 445 காளைகளும் 323 மாடுபுடி வீரர்கள் கலந்து கொண்டனர், 2019 ஆம் ஆண்டு 746 காளைகள், 599 மாடுபுடி வீரர்கள் மற்றும் கடந்த ஆண்டு ( 2020 ) 940 காளைகள், 745 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ஒவ்வொரு வருடமும் சிறந்த காளைகள், மாடுபுடி வீரர்களுக்கு மாருதி கார், ஹீரோ பைக், எஸ் எல் சூப்பர் போன்ற பரிசுகளும் வழங்கப்படுகிறது, மேலும் தங்க நாணயம், பீரோ சேர் சைக்கிள் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது அதே போல் இந்த ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000திறக்கும் மேற்பட்ட காளைகள், 900திர்க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் உணவு , குடிநீர், கழிப்பறை என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் கால்நடை சார்பில் 18 மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாக்னம் மற்றும் பொது சுகாதார துறை சார்பில் 12 மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாடுகள் காத்திருப்பு பகுதியும், வாடிவாசல் வரை மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. அதே போல் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது. சிறப்பு வாய்ந்த விழா நடத்த அனுமதி கொடுத்து உத்தரவு இட்ட முதல்வர் துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி.

கோவை அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து அதிக மாடுகள் கலந்து கொள்வது ஆரோக்கியமாக உள்ளது,பொதுவாக மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தான் ஜல்லிக்கட்டு பிரபலம், கோவையில் ஆரம்பித்து நம் மக்கள் நாட்டு மாடு வளர்கிறார்கள் அதனால் இந்த வாய்ப்பு உள்ளது வருங்காலத்தில் இன்னமும் இது அதிகமாக இருக்கும் இது ஆரோக்கியமான விசயம், பாரம்பரியத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம் என்பது இதில் நிரூபணம் ஆகிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க