• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்

February 20, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கோயம்புத்தூர் தமிழ் சங்கமம் மற்றும் தமிழ்மொழி காக்கும் கூட்டு இயக்கம் சார்பாக தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பாக நடைபெற்றது. பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ்மொழி காப்பு கூட்டியக்கத்தின் தலைவர் புலவர் அப்பாவு மற்றும் கோயம்புத்தூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவேண்டும் வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் தமிழ்மொழி பெற்றவர்களுக்கு 80 சதவீத அரசு பணி வழங்க வேண்டும் தொடக்க நிலை யிலும் தமிழ்மொழிக் கல்வி வழங்கப்பட வேண்டும் இதனை வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ் ஆட்சிமொழி அலுவல் மொழியாகவும் எல்லா துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலவர் பெருமக்கள் சான்றோர்கள் கல்வியாளர்கள் தமிழ் அமைப்புகள் என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க