February 20, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு, குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் சூட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் கோயம்புத்தூர் தமிழ் சங்கமம் மற்றும் தமிழ்மொழி காக்கும் கூட்டு இயக்கம் சார்பாக தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பாக நடைபெற்றது. பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், தமிழ்மொழி காப்பு கூட்டியக்கத்தின் தலைவர் புலவர் அப்பாவு மற்றும் கோயம்புத்தூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவேண்டும் வணிக நிறுவனப் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் தமிழ்மொழி பெற்றவர்களுக்கு 80 சதவீத அரசு பணி வழங்க வேண்டும் தொடக்க நிலை யிலும் தமிழ்மொழிக் கல்வி வழங்கப்பட வேண்டும் இதனை வரும் கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழ் ஆட்சிமொழி அலுவல் மொழியாகவும் எல்லா துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலவர் பெருமக்கள் சான்றோர்கள் கல்வியாளர்கள் தமிழ் அமைப்புகள் என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.