• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பழைய மின்னனு சாதன கிடங்கில் தீ விபத்து

February 18, 2021 தண்டோரா குழு

கோவை சங்கனூர் பகுதியிலுள்ள பழைய மின்னனு சாதன கிடங்கில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.

கோவை கண்ணப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வின்.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் பழைய இரும்பு மற்றும் மின்னனு சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.மேலும் கடந்த இரண்டாண்டுகளாக கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் சாலையில் பழைய மின்னனு சாதனங்கள் கிடங்கு அமைத்து தொழில் செய்து வருகிறார். இருபத்தைந்து செண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ள அக்கிடங்கில் சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் மின்னனு சாதன பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

5 ஊழியர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வரும் சூழலில் இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை மிகப்பெரிய அளவில் எழுந்ததையடுத்து தீ விபத்து குறித்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவலளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறை அதிகாரிகள் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர்.

மேலும் கிடங்கில் விபத்து ஏற்பட்ட போது பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.எனினும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க