• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை சேர்ந்த கராத்தே பயிற்சியாளருக்கு முதலமைச்சர் விருது

February 10, 2021 தண்டோரா குழு

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.1986ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.ஆலன் திலக் கராத்தே பள்ளியில் பயிற்சியாளராக உள்ளார். ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற கராத்தே பள்ளி மூலம் 34 ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்றுவித்து வருகிறார்.

1993 முதல் 96 வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் தேசிய அளவிலான போட்டியில் முதலிடத்தைப் பெற்றவர். 65 மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளிலும், 7 மாணவர்கள் பள்ளி அளவிலான தேசிய கராத்தே போட்டிகளிலும் கலந்துகொண்டு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று உள்ளனர்.

இந்நிலையில், கராத்தே கலையை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டு சேர்த்தமைக்காக, தமிழக அரசின் சார்பில் கராத்தே கலையில் தலைசிறந்த பயிற்சியாளருக்கான பட்டயத்தை கடந்த 8ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதினை வழங்கி கவுரவித்தார். மேலும் இவரது சேவையை பாராட்டி கேடயம் மட்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கராத்தே கலையில் சிறந்த பயிற்சியாளர் பட்டயத்தை முதன்முதலில் கார்த்திகேயன் முதன் முறையாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க