• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

February 4, 2021 தண்டோரா குழு

தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பிகே புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது (40) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி என்பவர் நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீத்தாலட்சுமி என்ற மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று தன்னுடைய வீட்டிற்கு வந்த அவர் வீடியோ மூலம் வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியை பார்த்து வந்தவர் மற்றும் அங்கு பணிபுரியும் செவிலியர் ஆகிய இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ,தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.தற்போது இந்த தற்கொலை வீட்டியோவானது வைரலாகி வருகிறது.

இதுவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள் அரசு மருத்துவ பிரேத கிடங்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கு வந்த போலீசார்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க