• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார்

February 4, 2021 தண்டோரா குழு

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அகமது கபீர் அவர்கள் தலைமையில்,கோவை மாநகர காவல் ஆணியாளரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது தொடர்ந்து இஸ்லாமிய இயக்கத்தை பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தவறாக பேசி வருவதாகவும் ,கடந்த 2நாட்களுக்கு முன் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும்,இவர்களது மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவின் போது தமுமுக மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணை செயலாளர் நூறுதீன், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜுதீன்,ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க