• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து சித்திரவதை பொதுமக்கள் புகார்

January 30, 2021 தண்டோரா குழு

கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்புக்கடை பகுதியில் ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தையை அவர்களது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போத்தனூர் போலீசார் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்த நஜூம்நிஷா – அப்துல்லா ஆகியோரை பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது போலீஸ் விசாரணையில் குழந்தையை நஜூம்நிஷா – அப்துல்லா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து வளர்ப்பு தாய் – தந்தை இருவரிடமும் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க