• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வண்ணமயமாக காட்சியளிக்கும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை

January 30, 2021 தண்டோரா குழு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொலிவுபடுத்தப்பட்டு கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை
வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

நாட்டில் உள்ள நகரங்களை பொலிவுறச்செய்யும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கோவையை பொலிவுபடுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டும் ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டு,நகரில் உள்ள சாலைகள் அழகு படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில், கடந்தாண்டு கோவை மணிக்கூண்டு சாலை பகுதிகள் வர்ணம் பூசப்பட்டு சோதனை அடிப்படையில் பொலிவு படுத்தப்பட்டன.அதேபோல தற்போது கிராஸ்கட் சாலை சிக்னல் துவங்கி, வடகோவை மேம்பாலம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டதுடன், சாலை ஓரங்களில் பொதுமக்கள் அமரும் இடங்கள், நடைபாதையில் இரு ஓரங்களிலும்,பூச்செடிகள் என கிராஸ் கட் சாலை தற்போது ஜொலித்து வருகிறது.

மேலும் படிக்க