• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரூ 2 கோடி ஜி.எஸ்.டி வரி மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது

January 29, 2021 தண்டோரா குழு

கோவையில் ரூ 2 கோடி ஜி.எஸ்.டி வரி மோசடியில் ஈடுபட்ட நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). இவர் அதே பகுதியில் ‘சன்ரைஸ் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் இரும்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் ஜிஎஸ்டி இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த நிறுவனத்தார் இரும்பு பொருட்களை விற்பனை செய்தது போன்று போலி பில் தயாரித்து அதன் மூலம் ரூ.2 கோடி ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க