• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

January 28, 2021 தண்டோரா குழு

குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யு.சி. துளசிதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, எல்.பி.எப். தியாகராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யு. தாமோதரன், எஸ்.டி.டி.யு.ரகுபுநிசார் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும், புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் படிக்க