• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – ஸ்டாலின்

January 26, 2021 தண்டோரா குழு

விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

டெல்லி போராட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு எந்த வித நிபந்தனையுத் இன்றி 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டம் நிறைவேற மாநிலங்களவையில் அதிமுக காரணமாக இருந்தது.இதை நியாயப்படுத்தி அதிமுகவும், முதல்வரும் பேசி வருகின்றனர். போராடும் விவசாயிகளை கொச்சை படுத்தி வருகின்றனர் தமிழக மக்களிடமும், இந்திய விவசாயிகளிடமும்
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என்றார்.

மேலும் படிக்க