• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது

January 22, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 10நாட்கள் தொடர்ச்சியாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக நொய்யல் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையால் கோவை குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், கோவையில் காலை மேக மூட்டதுடன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.பின்னர் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. குறிப்பாக துடியலூா், கவுண்டம்பாளையம், கணபதி, வடவள்ளி, பீளமேடு, ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. காலையில் பெய்த மழையால் கோவையில் குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

மேலும் படிக்க