• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள்

January 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி வெள்ளருக்கம்பாளையத்தில் 18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான சுழல் நிதியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேவராயபுரம் ஊராட்சியில் ரூ.38.80 லட்சம் மதிப்பில் பரமேஸ்வரன்பாளையம் முதல் குப்பேபாளையம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.44 லட்சம் மதிப்பில் சிறுவாணி சர்வீஸ் சாலை முதல் சின்னசாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் நரசீபுரம் சாலை முதல் பந்திபள்ளம் பொன்னுச்சாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் புள்ளாக்கவுண்டன்புதூரில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புள்ளாக்கவுண்டன் புதூரில் ரூ.33.70 லட்சம் மதிப்பில் மயானம் முதல் சின்னசாமி தோட்டம் – பெரும்பள்ளம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி என மொத்தம் ரூ. 3.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க