• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வூசு தற்காப்பு கலை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்வி உதவி தொகை

January 18, 2021 தண்டோரா குழு

வூசு தற்காப்பு கலை விளையாட்டு வீரர்கள் மத்திய அரசின் ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்வி உதவி தொகை பெற்று பயனடைந்துள்ளதாக வூசு கலை பயிற்சியாளர்கள் கோவையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு வூசு சங்கத்தின் மாநில அளவிலான பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இதில் கோவை,சென்னை, ஈரோடு திருச்சி, உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வூசு தற்காப்பு கலை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா கால விதிமுறைகளின் படி மாநில அளவிலான போட்டிகள் நடத்துவது மற்றும் மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி முகாம், போட்டிகளுக்கான ஆன்லைனில் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வூசு சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சுஹைல் அகமது கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

வூசு தற்காப்பு கலை போட்டிகளில் தற்போது அதிக அளவில் மாணவ,மாணவிகள் கலந்து கொள்வதாகவும்,அண்மையில் வூசு மாணவர்கள் மத்திய அரசு வழங்கிய ஒரு கோடி ரூபாய் அளவிலான கல்விதொகை பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் பொருளாளர் கோபி கோவை மாவட்ட தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க