• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மரத்தில் மோதிய கார் – இருவர் பலி

January 13, 2021 தண்டோரா குழு

ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் பிகாம் மூன்றாம் ஆண்டு கற்பகம் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் இவரது உறவினரான அனந்தராமன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஆலாந்துறையிலிருந்து அவர்களது அத்தையை சென்னனூரில் விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும்போது சிறுவாணி சாலையில் சிவசக்தி திருமண மண்டபம் அருகேயுள்ள சாலையின் இடதுபக்கத்தில் இருக்கும் வாகை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ்குமார், அனந்தராமன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறு மணியளவில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க