January 12, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மதுபானக் கடைகள் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள் மற்றும் அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் என அனைத்து டாஸ்மாக் கடைகளும் வரும் 15, 26 மற்றும் 28ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறுகையில்,
‘‘ வரும் 15ம் தேதி – திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி வள்ளலார் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நாட்களில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில்; மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.