• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் மழையில் நனைந்து சேதம்

January 7, 2021 தண்டோரா குழு

கோவை எம்.ஜி.ஆர்.மார்க்கெட்டில் போதிய இட வசதி இல்லாததால் இலட்சக்கணக்கான வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கோயமுத்தூர் வெங்காய மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி 600 முதல் ஆயிரம் கண் வரை பெரியவெங்காயம் மார்க்கெட்டுக்குள் வந்து பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போதுமான இடவசதி இல்லாததால் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் சேதமடைந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கோயம்புத்தூர் மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கடந்த சில மாதங்களாக கோவிட் தொற்று காரணமாக பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது முழுவீச்சில் மார்க்கெட்டில் உள்ள இடத்தில் செயல்பட்டு வருவதாகவும் ஆனால் போதிய இடவசதி இல்லாததால் மழையால் வெங்காயம் சேதமடைந்து வருவதாகவும் குறிப்பாக மார்க்கெட் வளாகத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வசதி கூட வியாபாரம் செய்யும் எங்களுக்கு இல்லை என கூறிய அவர், இதற்கு மாநகராட்சி தலையிட்டு வெங்காய மொத்த வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை எம்.ஜி.ஆர்.மார்க்கெட் வளாகத்தில் செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க