• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் சிக்கியது எப்படி?

January 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மூவரையும் கோவை மத்திய சிறையில் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில், ஏற்கனவே இரண்டு பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர்நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் தான் இவர்கள் மூவரும் சிறை செல்ல காரணமாக இருந்தது. அவர் தனது வாக்குமூலத்தில் கைதான மூவரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் படிக்க