• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை – பழனி; அதி வேக மோட்டார் பைக்குகளில் சென்று பெண்கள் அசத்தல் !

December 31, 2020 தண்டோரா குழு

உலக நன்மை வேண்டி பழனி மலை முருகனை வேண்டி கோவையிலிருந்து பழனி மலை வரை கியர் அப் பைக்கர்ஸ் குழு பெண்கள் அதி வேக மோட்டார் பைக்குகளில் சென்று அசத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் பிரிட்டனில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் .அனைத்து மக்களின் நன்மை கருதி பழனி மலை முருகனை வேண்டி . கோவையில் பெண்கள் மட்டுமே உறுப்பினராக உள்ள கியர் அப் பைக்கர்ஸ் குழுவை சேர்ந்த பெண்கள் அதி வேக திறன் கொண்ட பைக்குகளை ஓட்டியபடி கோவையிலிருந்து பழனி மலை வரை முருகனை தரிசிக்க ஊர்வலமாக சென்றனர். குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரியா தலைமையில் கோவையிலிருந்து பழனி மலை வரை செல்லும் இந்த பெண்கள் முன்னதாக அனைத்துலக நன்மை வேண்டி கடந்த ஒரு மாதமாக மாலை அணிந்து விரதம் இருந்துள்ளனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து பழனி முருகனை தரிசிக்க இரு சக்கர அதி வேக பைக்கில் கியர் அப் ரைடர்ஸ் பெண்கள் ஊர்வலமாக சென்றதை அனைவரும் பாராட்டினர்.

மேலும் படிக்க